கொரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று பிரபல இந்தி குணச்சித்திர நடிகை மரணம்

corona actress death bollywood
By Praveen May 06, 2021 10:29 AM GMT
Report

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த பிரபல இந்தி குணச்சித்திர நடிகை அபிலாஷா பட்டீல் உயிரிழந்தார்.

உலகிலே தற்போது கொரோனாவின் இரண்டாவது அலைக்கு அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடு இந்தியா தான். இங்கு நாள் ஒன்றுக்கு சுமார் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்படுவதாக தாவல் வெளியாகி அதிர்ச்சியளித்துள்ளது. மேலும் கொரோனா நோயாளிகளின் பாதிப்பு அதிகரிப்பதால் மருத்துவமனையில் போதுமான படுக்கை வசதிகள் கூட இல்லை.

இந்த தொற்றுக்கு பிரபலங்களும் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில், பிரபல இந்தி குணசித்திர நடிகை அபிலாஷா பட்டீல் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளார்.

இவர், சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்த சிச்சோரே, அக்‌ஷய்குமார் நடித்த குட் நியூஸ், பத்ரிநாத் கி துல்ஹானியா உட்பட பல படங்களில் நடித்துள்ளார். டிவி சீரியல்களில் நடித்திருக்கிறார். மும்பையில் வசித்து வந்த இவர், சில நாட்களுக்கு முன் பனாரஸ் சென்றுள்ளார். அங்கிருந்து மும்பை திரும்பிய அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து கொரோனா சோதனை மேற்கொண்டார்.

அவருக்கு தொற்று உறுதியானதால் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவர் மறைவுக்கு இந்தி திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.