தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 34,280 பேருக்கு கொரோனா!
corona
today
tamilnadu
By Irumporai
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 34,285 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் , தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 19,11,496 ஆக உயர்ந்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் 4,041, நபர்களுக்கும் கோவையில் 3,632 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 468 பேர் பலியாகியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 21,340 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 28,745 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மேலும் கடந்த சில நாட்களாக தமிழகத்தில்; கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது அதே சமயம் இறப்பு விகிதம் அதிகரித்து வருகிறது.