மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா : சென்னை ஐஐடியில் 10 பேருக்கு கொரோனா

COVID-19 Chennai
By Irumporai Apr 21, 2022 11:17 AM GMT
Report

சென்னை கிண்டியில் உள்ள ஐஐடியில் மாணவர்கள் உள்பட 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதியானதால் ஐஐடி வளாகத்தில் உள்ள மேலும் 18 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் கூறப்படுகிறது.

மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா : சென்னை ஐஐடியில் 10 பேருக்கு கொரோனா | Corona For 10 People At Iit Chennai

சென்னை ஐஐடியில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இதில் 3 பேருக்கு அறிகுறி இல்லை என்றும் 7 பேருக்கு லேசான அறிகுறிகள் உள்ளன எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனால் பரிசோதனைகளை அதிகரிக்கவும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்கவும் மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.