அச்சுறுத்தும் கொரோனா 6 மாவட்டங்களுக்கு ஊரடங்கா? - ஆலோசனையில் தலைமைச் செயலர்

covid19 tamilnadu
By Irumporai Apr 29, 2021 03:45 AM GMT
Report

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், அதிக பாதிப்பு உள்ள 6 மாவட்டங்களில் ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் குழுவோடு தலைமைச் செயலர் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.

இந்த ஆலோசனைக்கு பின்னர் புதிய கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தக் கூட்டத்தில், ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்களின் கருத்துகளை கேட்டறிந்து பின்னர், பாதிப்பு அதிகமுள்ள சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.