6 முதல் 8 வாரங்களில் இந்தியா மூன்றாவது அலையை எதிர்கொள்ளும் எய்ம்ஸ் தலைவர் எச்சரிக்கை!

corona-covid-covid19-aiims
By Arun Raj Jun 19, 2021 06:12 AM GMT
Report

6 முதல் 8 வாரங்களில் இந்தியா மூன்றாவது அலையை எதிர்கொள்ளும் எய்ம்ஸ் தலைவர் எச்சரிக்கை!

இன்று காலை எய்ம்ஸ் தலைவர் டாக்டர் ரன்தீப் குலேரியா தனியார் தொலைக்காட்சிக்கு  அளித்த பேட்டியில் இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்கள் பொது முடக்கத்திலிருந்து தளர்வுகள் கொடுத்து வருகின்றன. இந்தநிலையில் மக்கள் முதல் இரண்டு அலைகளிலும் எந்த பாடத்தையும் கற்றதாக தெரியவில்லை. தனிமனித இடைவெளியை மக்கள் கடைபிடிக்காமலும். முகக்கவசம் முறையாக அணியாமலும் இருந்து வருகின்றனர்.

இதனால் இந்தியா மூன்றாவது அலையை எதிர்கொள்ள வேண்டிய நெருக்கடியில் உள்ளது. 6 முதல் 8 வாரங்களில் இந்தியா மூன்றாவது அலையை எதிர்கொள்ள நேரிடலாம். ஆனால் மூன்றாவது அலையின் பாதிப்பு இப்போதிருந்தே ஆரம்பித்திருக்கும் என்று கருதுகிறேன். மக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் முறையாக பின்பற்றாவிட்டால் நிச்சயமாக மூன்றாவது அலையைத் தவிர்க்க முடியாது'' என அவர் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.