ஒரே நாளில் 3000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு - நடுங்கும் நாடுகள்
இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்தை கடந்துள்ளது.
கொரோனா பாதிப்பு
நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அனைத்து மாநிலங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் படி ஒரு நாள் கொரோனா பாதிப்பு 3094- ஆக பதிவாகியுள்ளது. தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 15,208- ஆக உயரந்துள்ளது. கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5 ஆக உள்ளது.
கவனம்
கடந்த 24 மணி நேரத்தில் குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 1,390 ஆக உள்ளது. நாடு தழுவிய தடுப்பூசி திட்டத்தின் கீழ், 220.65 கோடி டோஸ் கரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவிற்கு ஒருநாள் கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்தை தாண்டி பதிவாகியது நாடுகளுக்கிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.