ஒரே நாளில் 3000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு - நடுங்கும் நாடுகள்

COVID-19 India Virus
By Sumathi Mar 31, 2023 06:08 AM GMT
Report

இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்தை கடந்துள்ளது.

கொரோனா பாதிப்பு 

நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்பு அதி­க­ரித்து வரும் நிலை­யில், அனைத்து மாநி­லங்­களும் முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­களை தீவிரப்படுத்த வேண்­டும் என மத்­திய அரசு அறி­வித்­துள்­ளது.

ஒரே நாளில் 3000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு - நடுங்கும் நாடுகள் | Corona Cases Continue To Increase In India

இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் படி ஒரு நாள் கொரோனா பாதிப்பு 3094- ஆக பதிவாகியுள்ளது. தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 15,208- ஆக உயரந்துள்ளது. கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5 ஆக உள்ளது.

கவனம்  

கடந்த 24 மணி நேரத்தில் குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 1,390 ஆக உள்ளது. நாடு தழுவிய தடுப்பூசி திட்டத்தின் கீழ், 220.65 கோடி டோஸ் கரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவிற்கு ஒருநாள் கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்தை தாண்டி பதிவாகியது நாடுகளுக்கிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.