புதுச்சேரியில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் ஊக்கத்தொகை - தமிழிசை சௌந்தராஜன் அறிவிப்பு

corona doctor caretaker increment
By Praveen May 06, 2021 02:27 PM GMT
Report

 புதுச்சேரியில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களுக்கும் ஊக்கத் தொகை வழங்கப்படும் என துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்துள்ளார்.

புதுச்சேரி அரசின் இந்திராகாந்தி பட்டமேற்படிப்பு மையம் பொது மருத்துவமனையில் ரூ.1 கோடி செலவில் காற்றின் மூலம் நிமிடத்திற்கு 700 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் நிலையத்தை துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதுச்சேரியில் ஆக்ஸிஜனோடு கூடிய இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட படுக்கைகள் உள்ளதாகவும், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களுக்கும் ஊக்கத் தொகையாக ரூபாய் 5 கோடி வழங்கப்பட உள்ளதாகவும், மேலும் அரசு கட்டுப்பாடுகளை விதித்தாலும் கூட பொதுமக்கள் கட்டுப்பாடுடன் இருந்தால் மட்டுமே பரவலை தடுக்க முடியும் என துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.