தமிழகத்தில் புதிதாக 1,573 பேருக்கு கொரோனா பாதிப்பு

corona tamilnadu
By Irumporai Aug 25, 2021 02:06 PM GMT
Report

தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் 1,573 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 1,573 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26,05,647 பேர் ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 170 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று மட்டும் 27 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில், கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34,788 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இன்று மட்டும் கொரோனாவிலிருந்து 1,797 பேர் குணமடைந்த நிலையில், இதுவரையில் 25,52,507 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.