4 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு: மக்களே உஷார்!

COVID-19 COVID-19 Vaccine
By Thahir Jun 03, 2022 05:42 AM GMT
Report

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு அதிரடியாக உயர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று சமீப காலமாக கட்டுக்குள் வந்த நிலையில், கடந்த சில வாரங்களாக 2 ஆயிரத்தை தாண்டி தினசரி பாதிப்பு பதிவாகி வந்தது.

4 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு: மக்களே உஷார்! | Corona Affected Past 4 000 People Alert

இந்நிலையில், நேற்று தினசரி கொரோனா பாதிப்பு 3,712 ஆக இருந்த நிலையில்,கடந்த ஒரே நாளில் 4,041 ஆக அதிகரித்துள்ளது. இதனால் நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,31,68,585 ஆக பதிவாகியுள்ளது.

மேலும், கொரோனா இறப்பு எண்ணிக்கை நேற்று 5 ஆக இருந்த நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் 10 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை மொத்த பலியானவர்களின் எண்ணிக்கை 5,24,651 ஆக பதிவாகியுள்ளது. அதேபோல், கடந்த ஒரே நாளில் 2,363 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து உள்ளனர்.

மேலும்,இந்தியாவில் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,26,22,757 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 21,177 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் 193.83 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது எனவும் மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.