தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா 30,000 நெருங்கும் கொரோனா பாதிப்பு

covid19 tamilnadu
By Irumporai May 11, 2021 03:03 PM GMT
Report

தமிழகத்தில் மேலும் 29,272 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 14,38,509 ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது..

  தமிழகத்தில் தினமும் கொரோனா பாதிப்பு, உயிரிழப்பு, குணமடைந்தோர் விவரங்கள் குறித்து தினமும், தமிழக சுகாதாரத்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது.

அதன்படி, சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் மேலும் 29,272 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் மொத்த பாதிப்பு 14,38,509 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மேலும் 19,182 பேர் குணமடைந்துள்ளனர்.

இதன் மூலம் மொத்தம் 12,60,150 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 298 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 16,178 ஆக உயர்ந்துள்ளது. அரசு மருத்துவமனையில் 192 பேரும், தனியார் மருத்துவமனையில் 106 பேரும் உயிரிழந்துள்ளனர்.