பொன்னியின் செல்வன் பார்க்க குதிரையில் வந்த கூல் சுரேஷ் - வைரலாகும் வீடியோ
மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன்' படத்தை இந்திய சினிமாவே எதிர்பார்த்து காத்து கொண்டிருந்த எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய புகழ்பெற்ற நாவலான 'பொன்னியின் செல்வன் தற்போது திரைப்படமாக வெளியாகியுள்ளது.
கல்கியின் பொன்னியின் செல்வன்
விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்ய லட்சுமி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரகுமான் உள்ளிட்ட பல மொழிகளை சேர்ந்த பிரபல நட்சத்திரங்கள் நடித்துள்ள 'பொன்னியன் செல்வன்' படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப்படத்தை பிரம்மாண்டமாக இரண்டு பாகங்களாக உருவாக்கியுள்ளார் மணிரத்னம்.
குதிரையில் வந்த கூல் சுரேஷ்
இந்த நிலையில் நடிகர் கூல் சுரேஷ் ஒரு திரைப்படம் வெளியாகும் போது அதற்காக வித்யாசமான முறையில் வந்து படத்தை பற்றி விமர்சனம் செய்வார், அந்த வகையில் பொன்னியின் செல்வன் படத்திறகு குதிரையில் வந்துள்ளார்.
குதிரையில் Mass Entry கொடுத்த Cool Suresh!
— Cineulagam (@cineulagam) September 29, 2022
Watch It Live Here: https://t.co/WW2z3JXnhI#CoolSuresh #PonniyinSelvan #Ps1 #PonniyinSelvanFDFS #PS1FromToday #TamilCinema #Cineulagam pic.twitter.com/FjjcNx9neU
படத்தின் முக்கிய காதாபாத்திரமான வந்தியத்தேவன் தனது குதிரையில் பயணம் செய்வது போல பெரும்பாலான பகுதிகள் வரும் என்பது குறிப்பிடதக்கது.அவர் வந்த குதிரை பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலனாக நடித்துள்ள சியான் விக்ரம் பயன்படுத்திய குதிரை என்றும், அதனை கடன் வாங்கி வாடகைக்கு எடுத்து வந்திருப்பதாகவும் கூல் சுரேஷ் தெரிவித்தார்.
அவர் குதிரையில் வந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பொன்னியின் செல்வன் படத்தின் முதல் காட்சி இன்று அதிகாலை 4.30 மணிக்கு திரையிடப்பட்டது.
வழக்கமாக ரசிகர்கள் தான் அதிகாலை காட்சிக்கு அதிகளவில் வருவார்கள். ஆனால் பொன்னியின் செல்வன் படத்தை காண பேமிலி ஆடியன்ஸ் அதிகளவில் வந்திருந்தது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.