உதயநிதி சர்ச்சை....இதுவே காங்கிரஸ் நிலைப்பாடு..கே.சி.வேணுகோபால்

Udhayanidhi Stalin Tamil nadu DMK BJP
By Karthick Sep 04, 2023 07:27 AM GMT
Report

அனைவரது நம்பிக்கையையும் மதிக்கிறோம் என காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் உதயநிதியின் சனாதன விவகாரத்தில் கட்சி சார்பில் பதிலளித்துள்ளார்.

உதயநிதி பேச்சு   

சென்னையில் நடைபெற்ற தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின், கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா போன்ற சனாதனத்தை எதிர்ப்பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டியது என பேசியிருந்தார்.

congress-stand-in-santhana-issue-udhay

இந்த கருத்துக்கள் தேசிய அளவில் பெரும் சலசலப்புகளை ஏற்படுத்திய நிலையில், இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உதயநிதி மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

காங்கிரஸ் தரப்பில் பதில்  

தேசிய அரசியலில் இந்த சர்ச்சை எதிரொலித்த நிலையில், இது குறித்து காங்கிரஸ் அக்கட்சி சார்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது. சமதர்ம சமுதாயம் வேண்டும் என்பதே காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என்றும், கருத்து சொல்ல ஒவ்வொரு கட்சிக்கும் சுதந்திரம் உண்டு என குறிப்பிட்டு, அனைவரது நம்பிக்கையையும் மதிக்கிறோம் என காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்திருக்கிறார்.

congress-stand-in-santhana-issue-udhay

சனாதனம் பற்றிய உதயநிதியின் விமர்சனத்திற்கு இந்தியா கூட்டணி அமைத்து காப்பது ஏன் என்ற கேள்விக்கு செய்தியாளர்கள் சந்திப்பில் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் பதிலளித்துள்ளார்.