காங்கிரஸ் தலைவர் தேர்தல் முடிவுகள் இன்று அறிவிப்பு : அடுத்த காங்கிரஸ் தலைவர் இவர்தான் ?

Indian National Congress
By Irumporai Oct 19, 2022 02:52 AM GMT
Report

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்த தேர்தலில், சசி தரூரை காட்டிலும் மல்லிகார்ஜூன் கார்கே வெற்றி பெற அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காங்கிரஸ் தலைமை தேர்தல்

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் தேர்தலுக்கான தேர்தலில் அந்த கட்சியின் மூத்த தலைவர்களான சசி தரூர் மற்றும் மல்லிகார்ஜூன் கார்கே போட்டியிட்டனர். காங்கிரஸ் தலைவர் தேர்தல் கடந்த திங்கட்கிழமை (அக்டோபர் 17) நடைபெற்றது.

நாடு முழுவதுமாக 68 தேர்தல் பூத்துகளில் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 9,915 வாக்காளர்களில் 9,500-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களித்தனர்

காங்கிரஸ் தலைவர் தேர்தல் முடிவுகள் இன்று அறிவிப்பு : அடுத்த காங்கிரஸ் தலைவர் இவர்தான் ? | Congress President Election Results

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் ஆணைய தலைவர் மதுசூதன் மிஸ்திரி கூறுகையில், காங்கிரஸ் தலைவர் தேர்தல் சுதந்திரமாகவும், நேர்மையாகவும் வெளிப்படையாகவும் நடைபெற்றது.

மல்லிகார்ஜூன் கார்கே வெற்றி வாய்ப்பு 

இந்த தேர்தலில் 96 சதவீத வாக்குகள் பதிவாகின என தெரிவித்தார். 68 வாக்குச் சாவடிகளில் இருந்து வாக்கு பெட்டிகள் நேற்று தலைநகரில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டன.

தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இன்று காலை 10 மணிக்கு தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படும் பணி தொடங்குகிறது.  

வேட்பாளர்கள் சசி தரூர் மற்றும் மல்லிகார்ஜூன் கார்கேவின் முகவர்கள் முன்னிலையில் வாக்குப் பெட்டிகள் திறக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்படும் என தகவல். சில மணி நேரங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.

ஆக, 24 ஆண்டுகளில் முதல் முறையாக காந்தி குடும்பத்தை சாராத ஒருவர் காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்க உள்ளார். அது மல்லிகார்ஜூன் கார்கேவா அல்லது சசி தரூர் என்பது இன்று தெரிந்துவிடும். மல்லிகார்ஜூன் கார்கே வெற்றி பெற அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்.