வெறும் 90 வினாடி பேச்சுக்கே காங்கிரஸ் இப்படி பயந்துருச்சு.. பிரதமர் மோடி

Indian National Congress Narendra Modi Rajasthan
By Sumathi Apr 24, 2024 03:02 AM GMT
Report

தனது 90 விநாடி பேச்சு காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக மோடி தெரிவித்துள்ளார்.

 பிரதமர் மோடி

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் 7 கட்டமாக நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு கட்சி தலைவர்கள் தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.

pm modi

அதன் வரிசையில், ராஜஸ்தான், டோங்க் நகரில் பிரதமர் மோடி பரப்புரையில் ஈடுபட்டார். அதில் பேசிய அவர், தனது 90 விநாடி பேச்சால் காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி கட்சியினர் அச்சமடைந்துள்ளனர்.

திடீரென தமிழக பெண்ணின் காலை தொட்டு வணங்கிய பிரதமர் மோடி - பதறிய அதிகாரிகள்!

திடீரென தமிழக பெண்ணின் காலை தொட்டு வணங்கிய பிரதமர் மோடி - பதறிய அதிகாரிகள்!

காங்கிரஸ் திட்டம்

அரசியல் சாசனத்துடன் காங்கிரஸ் கட்சி விளையாடுகிறது. பட்டியலின மக்களுக்கு அம்பேத்கர் அளித்த இடஒதுக்கீடு உரிமையை, வாக்கு வங்கிக்காக, இஸ்லாமியர்களுக்கு வழங்க காங்கிரஸ் விரும்புகிறது.

வெறும் 90 வினாடி பேச்சுக்கே காங்கிரஸ் இப்படி பயந்துருச்சு.. பிரதமர் மோடி | Congress Panic 90 Second Speech Says Modi

மக்களின் சொத்துகள் மற்றும் தங்கத்தை கணக்கெடுத்து, அவற்றை நாட்டில் ஊடுருவியவர்களுக்கு பகிர்ந்தளிக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

இடஒதுக்கீடு எப்போதும் மாற்றப்படாது. மதத்தின் அடிப்படையில் பிரிக்கப்படாது எனத் தெரிவித்துள்ளார்.