நைட்டு வர்றியா னு கேட்கிறாங்க .. கலங்கிய சோனா!

cinema sociealmedia sona
By Irumporai Jul 13, 2021 02:09 PM GMT
Report

தமிழ் திரையுலகிற்கு பூவெல்லாம் உன் வாசம் படத்தின் மூலம் அறிமுகமான நடிகை சோனா. தமிழ் மட்டுமில்லாது மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார் .

தற்போது சிவப்பு மனிதர்கள் என்ற படத்தில் நடித்து வரும் சோனா படப்பிடிப்பு செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், சமூக வலைதளங்களில் ஆபாசமாக கருத்துக்கள் பகிரப்படுவதாக கூறினார்.

சினிமாவை தாண்டியும் நடிகைகளை  தனிப்பட்ட முறையில் தாக்குவதாகவும் கூறியுள்ள சோனா.

 படத்தில் இடம்பெறும் கேரக்டர் பற்றியும் விமர்சிக்கலாம் உரிமை உள்ளது. ஆனால் பர்சனல் அட்டாக் செய்யக்கூடாது.

நைட்டு வர்றியா என்றெல்லாம் கேட்கிறார்கள். அந்த மாதிரி விஷயங்கள் ரொம்ப அருவருப்பா இருக்கு என்றும் வேதனைப்பட்ட சோனா. உங்க வீட்டுலேயும் பொம்பளைங்க இருக்காங்க இதுமாதிரி பேசுறவங்க இனிமே திருந்துவாங்க என்று நம்புகிறேன் என்றும் கூறினார்.