பெண் வீட்டாருக்கு பாயாசத்தை போட்ட மாப்பிள்ளை வீட்டார் - அடிதடியில் முடிந்த நிச்சயத்தார்த்தம்

Tamil nadu Viral Video Tamil Nadu Police
By Thahir Jun 05, 2023 12:34 PM GMT
Report

சீர்காழியில் நடைபெற்ற நிச்சயதார்த்தின் போது பாயாசத்திற்காக பெண் வீட்டாரும், மாப்பிள்ளை வீட்டாரும் ஒருவரை ஒருவர் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நிச்சயதார்த்த விழாவில் பாயாசம் 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தெற்கு ரத வீதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நிச்சயதார்த்த விழா நடைபெற்றுள்ளது.

அப்போது நிச்சயதார்த்த விழாவுக்கு வருகை தந்த அனைவருக்கும் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டு பாயாசத்துடன் சாப்பாடு பரிமாறப்பட்டுள்ளது.

Confrontation by Payasam at engagement ceremony

சாப்பிடும் போது பெண் வீட்டார் பாயாசம் சரியில்லை எனக் கூறி மாப்பிள்ளை வீட்டைச் சேர்ந்தவர்களை திட்டியதாக கூறப்படுகிறது.

ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்த மாப்பிள்ளை வீட்டார் ஆத்திரத்தில் சாம்பாரை பெண் வீட்டார் மீது ஊற்றியதாக கூறப்படுகிறது.

பாயாசத்தால் அடிதடி 

இதனால் மாப்பிள்ளை வீட்டாருக்கும், பெண் வீட்டாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டது. மண்டப வாசலின் நுழைவாயிலில் இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர்.

Confrontation by Payasam at engagement ceremony

இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் இருரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். பாயாசம் கேட்டது ஒரு குத்தமா? அதுக்காகவா இப்படி அடிதடி என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.