அப்பளத்தால் அடித்தடியான திருமண விருந்து - சிதறி ஓடிய உறவினர்கள்
திருமண விருந்தில் அப்பளம் கேட்டதால் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 3 பேர் காயமடைந்தனர்.
கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள ஹரிப்பாடு முட்டம் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.
அப்பளத்தால் நடந்த மோதல்
இந்த திருமணம் முடிந்த பின்பு விருந்து தொடங்கியது.அப்போது திருமண விருந்து நடைபெற்றுள்ளது. திருமண விருந்தில் மாப்பிள்ளையின் நண்பர்கள் சாப்பாடு பரிமாறியவர்களிடம் கூடுதல் அப்பளம் கேட்டுள்ளனர். கூடுதல் அப்பளம் எல்லாம் கிடையாது என சாப்பாடு வைத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் மாப்பிள்ளையின் நண்பர்களுக்கே அப்பளம் இல்லையா? என்று கூறியுள்ளளனர்.
இதனால் மாப்பிள்ளை வீட்டார் அங்கு திரண்டனர். பின் மாப்பிள்ளையின் நண்பர் ஒருவர் மண்டபத்தில் இருந்த மேஜை, நாற்காலிகளை அடித்து உடைத்துள்ளனர்.
சிதறி ஓடிய உறவினர்கள்
இதை பெண் வீட்டாரும் மண்டபத்தின் ஊழியர்களும் தட்டி கேட்டுள்ளனர். இதில் பிரச்சனை பெரிதாகவே இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கி கொண்டதில் 3 பேர் படுகாயம் அடைந்தனர். இதனால் திருமண மண்டபமே கலவரகளமாக மாறியது இதனால் திருமணத்திற்கு வந்த உறவினர்கள் சிதறி ஓடினர்.
தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் இரு தரப்பினரையும் மண்டபத்தை விட்டு விரட்டி அடித்தனர். இந்த கோஷ்டி மோதல் திருமண மண்டப உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்யபட்டு உள்ளது.