ரவுடிகளை ஊக்கப்படுத்துகின்றார் நயன்தாரா : கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் , காரணம் என்ன?

nayanthara vigneshsivan policecomplaint
By Irumporai Mar 22, 2022 05:10 AM GMT
Report

 ரவுடிகளை ஊக்கப்படுத்தும் விதமாக நடந்து கொள்வதால் நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவனை கைது செய்ய வேண்டுமென்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார்  கொடுக்கப்பட்டுள்ளது.

சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன். சமூக ஆர்வலரான இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

அதில், நயன்தாராவும் விக்னேஷ்சிவனும் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற பட நிறுவனத்தை துவங்கியுள்ளனர், ரவுடிகளை ஒழிக்க தமிழக போலீஸ் அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

ரவுடிகளை ஊக்கப்படுத்துகின்றார் நயன்தாரா :  கமிஷனர் அலுவலகத்தில்  பரபரப்பு புகார் , காரணம் என்ன? | Complaint Police Seeking The Arrest Nayanthara

அப்படியிருக்கும்போது சமூகப் பொறுப்பின்றி இயக்குநர் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் ரவுடிகளை ஊக்கப்படுத்தும் விதமாக ரவுடி பிக்சர்ஸ் என்ற பட தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி இருப்பது பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை தருகிறது. அதனால் ரவுடி பிக்சர்ஸ் பட தயாரிப்பு நிறுவனத்தை தடை செய்ய வேண்டும்.

இந்த பட நிறுவனத்தை துவங்கியதற்காக நயன்தாரா விக்னேஷ் சிவனை கைது செய்ய வேண்டும் . இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது.

படநிறுவனத்திற்கு ரவுடி என பெயர் வைத்த காரணத்தால் நயனதாரவையும் ,விக்னேஷ்சிவனையும் கைது செய்ய வேண்டும் என்று புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.