நடிகை ராதா மீது புகார்; மீண்டுமா.. என்ன சம்பவம் தெரியுமா?

Tamil Cinema Chennai Crime
By Sumathi Apr 29, 2024 06:35 AM GMT
Report

நடிகை ராதா மீது காவல்நிலையத்தில் மீண்டும் புகாரளிக்கப்பட்டுள்ளது.

நடிகை ராதா 

தமிழில் சுந்தரா டிராவல்ஸ் படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ராதா. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டார்.

actress radha

அதன்பின் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தனது மகன் மற்றும் தாயாருடன் வசித்து வந்தார். தொடர்ந்து, சப் இன்ஸ்பெக்டர் வசந்த ராஜா என்பவரை 2வது திருமணம் செய்துக்கொண்டார். இவருக்கும் ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

திடீரென, வசந்த ராஜா தன்னை சந்தேகப்பட்டு அடித்து துன்புறுத்தி வருவதாக காவல்நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால், ராதா தன்னை வற்புறுத்தி இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டதாகவும், அவருக்கு பல ஆண் நண்பர்களுடன் பழக்கம் உள்ளதாகவும், அதை தட்டிக் கேட்டதால் தன் மீது வீண்பழி சுமத்துவதாகவும் வசந்த ராஜா தெரிவித்தார்.

என் மகளுக்கு ப்ரோமோஷன் கிடைச்சுருக்கு - வாழ்த்து தெரிவித்த நடிகை ராதா!

என் மகளுக்கு ப்ரோமோஷன் கிடைச்சுருக்கு - வாழ்த்து தெரிவித்த நடிகை ராதா!

பண விவகாரம்

அதன்பின், கணவர் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்துக் கொண்டதால் புகாரை திரும்பப் பெற்றுக்கொள்வதாக கூறி ராதா வழக்கை வாபஸ் பெற்றார்.

நடிகை ராதா மீது புகார்; மீண்டுமா.. என்ன சம்பவம் தெரியுமா? | Complaint Against Actress Radha Again In Police

இந்நிலையில், பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் முரளி என்பவரை தாக்கியதாக நடிகை ராதா மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தலையில் படுகாயமடைந்த முரளி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னதாக பிரான்சிஸ் என்பவரை தாக்கியதாக நடிகை ராதா, அவரது மகன் மீது புகாரளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.