காமன்வெல்த்...ஒரே நாளில் 14 - பதக்க வேட்டையில் 5வது இடத்தில் இந்தியா!
இந்தியா 13 தங்கம், 11 வெள்ளி, 16 வெண்கல பதக்கங்களுடன் 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
14 பதக்கங்கள்
பர்மிங்காம் 2022 தொடரில் நேற்றைய நாள் இந்தியாவிற்கு சிறந்த நாளாக அமைந்ததாகவே கூறலாம். இந்தியாவிற்கு மூன்று வெள்ளி மற்றும் ஏழு வெண்கலப் பதக்கங்களைக் குவித்து மொத்தம் 14 பதக்கங்களை கைப்பற்றியது.
9வது நாளில் இந்திய வீரர்கள் ரவி தஹியா, வினேஷ் போகட், நவீன் குமார் மற்றும் பவினா படேல் ஆகியோர் இந்தியாவுக்காக தங்கப் பதக்கங்களை வென்றனர். ஆண்களுக்கான 57 கிலோ பிரிவில் ரவி தஹியா, 53 கிலோ பிரிவில் வினேஷ் போகட் மற்றும் 74 கிலோ பிரிவில் நவீன் குமார் தங்கம் வென்றனர்.
மல்யுத்தம்
இவர்களைத் தவிர, மல்யுத்த வீரர்களான தீபக் நெஹ்ரா, பூஜா கெலாட் மற்றும் பூஜா சிஹாக் ஆகியோர் வெண்கலப் பதக்கங்களை வென்றனர். இங்கிலாந்து அணியை 4 ரன்களில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது.
இதன் மூலம் இந்திய அணிக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதியானது. காமன்வெல்த் பெண்களுக்கான 10 கிமீ ஓட்டப் பந்தயத்தில் பிரியங்கா கோஸ்வாமியும், ஆண்களுக்கான 3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸில் அவினாஷ் சேபலும் வெள்ளிப் பதக்கங்கள் வென்றனர்.
ஓட்டப் பந்தயம்
சாகருக்கு முன், நிது கங்காஸ், நிகத் ஜரீன் மற்றும் அமித் பங்கல் ஆகியோர் அந்தந்த எடைப் பிரிவுகளில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றனர்.
மூன்று இந்தியர்கள், முகமது ஹுசாமுதீன், ஜெய்ஸ்மின் லம்போரியா மற்றும் ரோஹித் டோகாஸ் ஆகியோர் முடிவில் தோல்வியடைந்து, வெண்கலப் பதக்கத்தை தக்க வைத்து கொண்டனர்.