பயம் காட்டிய ரவீந்திர ஜடேஜா - களத்தில் காமெடி செய்த இலங்கை வீரர்கள் : வைரல் வீடியோ
இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரவீந்திர ஜடேஜா செய்த செயலால் இலங்கை வீரர்கள் ஒரு நிமிடம் திணறித் தான் போனார்கள்.
இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி மொகாலியில் நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய இந்திய அணியில் முதல் நாளில் ரிஷப் பண்ட் 96, ஹனுமா விஹாரி 58 ரன்கள் விளாச ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 357 ரன்கள் எடுத்தது. இன்று 2 ஆம் நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து பேட் செய்த ரவீந்திர ஜடேஜா சதமடித்து அசத்தினார். அவருக்கு பக்க பலமாக இருந்த அஸ்வின் 61 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இறுதியாக 8 விக்கெட்டுகள் இழப்புக்கு இந்தியா 574 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. ஜடேஜா கடைசி வரை ஆட்டமிழக்காமல் 175 ரன்கள் குவித்தார். தொடர்ந்து இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கி விளையாடி வருகிறது.
இந்நிலையில் இன்றைய ஆட்டத்தில் இலங்கை அணியின் பந்துவீச்சின் மீது ஆதிக்கம் செலுத்திய ரவீந்திர ஜடேஜா பவுண்டரிகள் விளாசிய நிலையில் ரன் அவுட் வாய்ப்பில் இருந்து தப்பினார். அவரது ஆட்டத்தைப் பார்த்து இலங்கை வீரர்கள் ஒரு நிமிடம் திணறித் தான் போனார்கள்.
அதன் வீடியோ:
— crictalk (@crictalk7) March 5, 2022