பிரபல நகைச்சுவை நடிகர் போண்டா மணி மருத்துவமனையில் அனுமதி - ரசிகர்கள் பிரார்த்தனை!
பிரபல நகைச்சுவை நடிகர் போண்டா மணி, சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரில் ஒருவர் போண்டாமணி.
இலங்கையை பூர்விகமாகக் கொண்ட இவர் 1991-ம் ஆண்டு வெளியான பாக்யராஜ்-இன் 'பவுனு பவுனுதான்' என்ற படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து சிறிய கதாபாத்திரத்தில் நடித்தது தொடங்கி காமெடி நடிகராக பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றார்.
ரன், சுந்தரா டிராவல்ஸ், வின்னர், திருமலை உள்ளிட்ட பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.
இந்நிலையில், இதய கோளாறு காரணமாக பிரபல நகைச்சுவை நடிகர் போண்டா மணி, சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் நடிகர் போண்டா மணி விரைவில் குணமடைய ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.