2 குட்டி யானைகள் உட்பட 3 யானைகள் ரயில் மோதி உயிரிழந்த சோகம்
train accident
coimbatore
elephant death
By Anupriyamkumaresan
கோவை மதுக்கரை அருகே கேரளாவிலிருந்து வந்த ரயில் மோதி 3 யானைகள் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் மதுக்கரை அருகே உள்ள வனப்பகுதிகளில் யானைகள் உலாவருவது வழக்கம். அந்த வகையில், நேற்று இரவு மதுக்கரை அருகே உள்ள ரயில் தண்டவாளத்தை 2 குட்டி யானைகளோடு ஒரு பெரிய யானை கடக்க முயன்றுள்ளது.
அப்போது எதிர்பாராதவிதமாக கேரளாவில் இருந்து வந்த ரயில் 3 யானைகள் மீதும் மோதியதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர், யானைகளின் உடலை பரிசோதித்து வருகின்றனர்.
251 வைரங்களுடன் அசத்தல் வாட்ச் அணிந்து திருமண விழாவில் கலக்கிய ஜான்வி கபூர்! விலை எவ்வளவு தெரியமா? Manithan
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: ஜூலை 16 முதல் இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan