கோவையில் சாக்குபையில் சிறுமியின் சடலம் - குடும்ப நண்பர் கைது

dead coimbatore 14yeargirl
By Irumporai Dec 17, 2021 04:37 AM GMT
Report

கோவை சரவணம்பட்டி அடுத்த யமுனா நகர் பகுதியில் முட்புதரில் சாக்குமூட்டையில் கை கால் மற்றும் வாய் கட்டப்பட்ட நிலையில் 15 வயது சிறுமியின் உடல்  நேற்று மீட்க்கப்பட்டது.

நேற்று காலை  10 மணியளவில் கோவை சரவணம்பட்டி அருகேயுள்ள சிவானந்தபுரம் யமுனா நகரில் தூய்மை பணியாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அருகிலிருந்த முட்புதரில் கிடந்த ஒரு கட்டப்பட்ட சாக்குப்பையிலிருந்து துர்நாற்றம் வீசியிருக்கிறது.

சாக்கை அவிழ்த்து திறந்து பார்த்தபோது கை, கால்கள் கட்டப்பட்டு அழுகிய நிலையில் ஒரு பெண்ணின் சடலம் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

உடனே சரவணம்பட்டி காவல்துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தடவியல் துறையின் உதவியோடு பிரேத பரிசோதனை மேற்கொண்டதில் அது 15 வயது சிறுமியின் உடல் என்பது தெரியவந்துள்ளது.

 கடந்த 11ஆம் தேதி சிறுமி காணாமல் போனதாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்த நிலையில் சிறுமி தங்கியிருந்த வீட்டின் அருகிலுள்ள முட்புதரிலேயே சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளதால், பிரேதத்தை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ள காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில் , குடும்ப நண்பரான முத்துக்குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர் ,3 சவரன் நகைக்காக வீட்டுக்கு வரவழைத்த அவர், கொலை செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் அந்த பெண்ணை அந்த நபர் பாலியல் வன் கொடுமை செய்தாரா என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.