தந்தையை கத்திரிக்கோலால் குத்திக் கொன்ற மகன்: அதிர்ச்சி சம்பவம்

Murder Coimbatore
By Thahir Aug 12, 2021 09:38 AM GMT
Report

கோவை அருகே குடும்ப தகராறில் திமுக பிரமுகரை கத்தரிக்கோலால் குத்திக் கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் சொக்கம்புதூர் பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் திமுக நிர்வாகியான இவர் வாழைக்காய் கமிஷன் மண்டி வைத்து நடத்தி வந்தார்.

இவரது மகன் ராஜேஷ் என்கிற கோவிந்தராஜன். இவருக்கு திருமணமாகி மனைவி, குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் ராமச்சந்திரனிடம், சொத்துக்களை பிரித்து தரும்படி அவரது மகன் ராஜேஷ் கேட்டு வந்துள்ளார். இது தொடர்பாக தந்தை – மகன் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.


இந்த நிலையில், நேற்று இரவு மதுபோதையில் வீட்டிற்கு வந்த ராஜேஷ், ராமச்சந்திரனிடம் சொந்த வீடு வாங்கி தரும்படி கேட்டுள்ளார்.

அதற்கு ராமச்சந்திரன் மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த ராஜேஷ், வீட்டிலிருந்த கத்திரிக் கோலால் தந்தை ராமச்சந்திரனின் கழுத்து பகுதியில் குத்தினார். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இத்திலேயே உயிரிழந்தார்.

தகவல் அறிந்து வந்த செல்வபுரம் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ராஜேஷை கைது செய்தனர். 

தந்தையை கத்திரிக்கோலால் குத்திக் கொன்ற  மகன்: அதிர்ச்சி சம்பவம் | Coimbatore Murder