கோவை கார் வெடிப்பு சம்பவம்; தலைமைச் செயலகத்தில் டிஜிபி முக்கிய ஆலோசனை

Tamil nadu Tamil Nadu Police
By Thahir Oct 26, 2022 06:41 AM GMT
Report

கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் இறையன்புவுடன் டிஜிபி சைலேந்திர பாபு முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

தலைமைச் செயலாளர், டிஜிபி ஆலோசனை 

கடந்த 23 ஆம் தேதி கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே அதிகாலை 4 மணிக்கு கார் ஒன்று வெடித்து சிதறியது.

இதை பார்த்த அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு தீயை அணைத்தனர்.

காரை ஓட்டி வந்த ஜமேஷா முபின் என்பவர் உடல் கருகி பலியானார்.  பின்னர் அங்கு வந்த தீயணைப்புத்துறையினர் தீப்பற்றி எரிந்த காரை அணைத்தனர்.

கோவை கார் வெடிப்பு சம்பவம்; தலைமைச் செயலகத்தில் டிஜிபி முக்கிய ஆலோசனை | Coimbatore Car Blast Incident Dgp Key Advice

இதையடுத்து இறந்தவரின் உடலை கைப்பற்றி உக்கடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இச்சம்பவம் தொடர்பாக கோவையில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வரும் நிலையில்,

சென்னை தலைமைச் செயலகத்தில் இறையன்பு தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு, உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் உள்ளிட்டோருடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.