இங்கிலாந்து வீரர்களை அவமானப்படுத்திய பயிற்சியாளர் - கொந்தளிக்கும் ரசிகர்கள்

AUSvENG ashes test
By Petchi Avudaiappan Dec 25, 2021 12:02 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in விளையாட்டு
Report

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான 3வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்கவுள்ள நிலையில் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது. 

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 2வது டெஸ்ட் போட்டியிலும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி 275 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனால் 5 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

பாக்ஸிங்டே  எனப்படும் 3வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்கவுள்ளது. இன்னும் ஒரு போட்டியில் இங்கிலாந்து தோற்றால் கூட ஆஷஸ் கோப்பையை இங்கிலாந்து இழக்க நேரிடும்.ஆஷஸ் கோப்பையை இழப்பது என்பது இங்கிலாந்துக்கும் சரி, ஆஸ்திரேலிய அணிக்கும் சரி பெரும் மானப் பிரச்சினை  என்பதால் இங்கிலாந்து கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. 

இங்கிலாந்து அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது அவர்களது மோசமான பேட்டிங் தான். இங்கிலாந்து பந்துவீச்சாளர்களும் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு நெருக்கடி தர தவறுகின்றனர். 

இந்த நிலையில், இங்கிலாந்து வீரர்களை பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் சராமாரியாக திட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இங்கிலாந்து வீரர்கள் ஒவ்வொருவரும் ஆட்டமிழந்ததை அவர்களை அழைத்து பிக் பாஸ் போல் வீடியோ போட்டு எவ்வளவு மோசமாக ஆடி ஆட்டமிழந்துள்ளாய் பார் என்று சரமாரியாக பேசியுள்ளார். 

பயிற்சியாளர் சில்வர்வுட்டின் இந்த பேச்சு , வீரர்களின் மனதை காயப்படுத்தியுள்ளதாக தெரிகிறது. மேலும் கேப்டனாக ஜோ ரூட் நடப்பாண்டில் சொதப்பி வருவதாகவும், அணி வீரர்களின் ஒத்துழைப்பு அவருக்கு கிடைக்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

இதனால் அவரது கேப்டன் பதவிக்கும் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியில் பல அதிரடி மாற்றங்களை கொண்ட வர அணி நிர்வாகம் முடிவு எடுத்துள்ளது. ஜானி பாரிஸ்டோ மற்றும் லாரன்ஸ் ஆகியோருக்கு இங்கிலாந்து அணியில் வாய்ப்பு அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.