பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
pm
farmers
cm
wrote letter
By Anupriyamkumaresan
பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீட்டுக் கட்டணத்தில் ஒன்றிய அரசின் பங்களிப்பினை முன்பிருந்தபடி திரும்ப மாற்றியமைக்க வேண்டும் என பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், பிரதமர் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் காப்பீடு கட்டணத்தில் ஒன்றிய அரசின் பங்களிப்பினை குறைக்கும் வகையில், முன்பு இருந்தபடி 49:49:2 என்ற விகிதத்தில் காப்பீட்டு கட்டணப் பங்கினை திரும்ப மாற்றியமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.