விவசாய கடனை தள்ளுபடி செய்த முதல்வர் விஜய் - யாருக்கு எவ்வளவு?

Vijay Tamil nadu
By Karthikraja May 25, 2026 01:54 PM GMT
Report

கூட்டுறவு வங்கிகளின் மூலம் பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்கு பயிர்க்கடனை முதல்வர் விஜய் தள்ளுபடி செய்துள்ளார்.

பயிர்க்கடன் தள்ளுபடி

கூட்டுறவு வங்கிகளின் மூலம் பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்கு பயிர்க்கடனை தள்ளுபடி செய்து தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.

விவசாய கடனை தள்ளுபடி செய்த முதல்வர் விஜய் - யாருக்கு எவ்வளவு? | Cm Vijay Waiver Of Crop Loans Farmers Upto Rs50000

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், "மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (25.05.2026) தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், விவசாயிகளுக்கான பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாக, மாண்புமிகு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் திரு. ர. வினோத், மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு. வி. காந்திராஜ், மாண்புமிகு நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர் திரு. என். மரிய வில்சன் மற்றும் துறை அலுவலர்களுடன் ஆய்வு செய்யப்பட்டது.

இந்திய ரிசர்வ் வங்கியின் 28.11.2025 ஆம் தேதியிட்ட அரசு கடன் தள்ளுபடி திட்டங்களுக்கான மாதிரி செயல்பாட்டு நடைமுறைகளின்படி, பயிர்க்கடன் தள்ளுபடிக்கான முழுத்தொகையையும் அரசானது 45 முதல் 60 நாட்களுக்குள் செலுத்தவேண்டும் என்ற வழிகாட்டுதலின்படியும், தமிழ்நாடு அரசின் இன்றைய நிதிநிலை மற்றும் நிதி முழுமையாக ஆதாரங்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும், இந்த இக்கட்டான சூழ்நிலையிலும், கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் 01.05.2025 முதல் 28.02.2026 வரை பெற்ற பயிர்க்கடனை கீழ்க்கண்டவாறு தள்ளுபடி செய்ய தழிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.

விவசாய கடனை தள்ளுபடி செய்த முதல்வர் விஜய் - யாருக்கு எவ்வளவு? | Cm Vijay Waiver Of Crop Loans Farmers Upto Rs50000

மேலும். கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிர்க்கடன் பெற்ற இதர பெரு விவசாயிகளுக்கு தலா ரூ.5,000 பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும். இந்தப் பயிர்க்கடன் தள்ளுபடி, எதிர்வரும் சாகுபடி பருவத்திற்கு கடன் பெற விரும்பும் விவசாயிகளுக்கு பெருமளவில் பயன்தரும். 

இந்தப் பயிர்க்கடன் தள்ளுபடித் திட்டத்தின் கீழ் 01.05.2025 முதல் 28.02.2026 வரை கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்றுள்ள 14,22,555 விவசாயிகள் பயனடைவார்கள். இதனால் அரசுக்கு ரூ.2.044.46 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.