சட்டப்பேரவையில் முதலமைச்சரின் பதிலுரை
மூன்று நாட்கள் விடுமுறைக்கு பின்னர் இன்று சட்டப்பேரவை கூடிய நிலையில் காவல்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் முதலமைச்சர் விஜய் பதிலுரையை தொடங்கினார்.
அவர் பேசுகையில், சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்தால் தொழில்முதலீடு வரும், தொழில்கள் முறையாக நடைபெறும்.
சாலைகள், ஆலைகள் அமைப்பதால் மாநிலத்தின் வளர்ச்சி தீர்மானிக்கப்படுவதில்லை.
சட்டத்தை மதிப்பு நடப்பவர்களுக்கு காவல்துறை உற்ற நண்பராக இருக்க வேண்டும். யாரிடமும் சார்பின்றி நடுநிலை தவறாது நீதி வழங்குவதே சரியான ஆட்சி.
எதிர்கட்சியினர் கூறியதாக கருத்தாக இருந்தாலும் அதில் உண்மை உள்ளதா என ஆராய்ந்து சரிசெய்வதில் பாகுபாடில்லை.
ஒவ்வொரு குற்றத்திற்கு பின்னும் குடும்ப பிரச்சனை, போதைப்பொருள் பயன்பாடு இருக்கலாம் என தொடர்ந்து பேசி வருகிறார்.