காலை உணவு திட்டம் : இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்

M K Stalin DMK
By Irumporai Sep 15, 2022 02:08 AM GMT
Report

1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தை மதுரையில் இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் .

காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம்

தமிழக சட்டசபை பேரவையில் கடந்த மே மாதம் முதலமைச்சர் ஸ்டாலின் அரசு பள்ளிகளில் பயிலும் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இனி காலை சிற்றுண்டி வழங்கப்படும்.

அதன் முதல் கட்டமாக இத்திட்டம் சில மாநகராட்சிகளிலும் தொலைதூர கிராமப்புறங்களிலும் செயல்படுத்தப்பட உள்ளது’ என்று ஏற்கனவே அறிவித்திருந்தார் . அதன் முதற்கட்ட நடவடிக்கையாக மறைந்த முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த தினமான இன்று முதல் 45 ஆயிரத்து 545 அரசு தொடக்கப் பள்ளிகளில் இத் திட்டம் தொடங்கப்படுகிறது.

காலை உணவு திட்டம் :  இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் | Cm Started Begin Breakfast Scheme

இன்று தொடக்கம்

இன்று காலை 8 மணிக்கு மதுரை நெல்பேட்டை ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் உணவு பரிமாறி மாணவர்களுடன் அமர்ந்து சாப்பிடுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின் .

அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் காலை உணவு வழங்கும் திட்டம் பிற மாவட்டங்களிலும் நாளை தொடங்கி வைக்கப்படுகிறது . மேலும் மாநகராட்சி, நகராட்சி, ஊரக மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 1,14, 095 தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு முதற்கட்டமாக காலை உணவு வழங்கும் திட்டத்தை செயல்படுத்த ரூ.33.56 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது .