'உண்மையான ஊடகவியலே துடிப்பான மக்களாட்சியின் கண்காணிப்பாளர்' - முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!
தேசிய பத்திரிகையாளர்கள் தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பத்திரிக்கையாளர் தினம்
கடந்த 1996ம் ஆண்டு முதல் "தேசிய பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா" தொடங்கப்பட்ட நவம்பர் 16ம் நாள், தேசிய பத்திரிகையாளர் நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.
எனவே தேசிய பத்திரிக்கையாளர் தினம் கொண்டாடப்படும் இன்று நாடு முழுவதும் உள்ள பத்திரிகையாளர்களுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.அந்த வகையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மு.க.ஸ்டாலின் வாழ்த்து
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் "உண்மையான ஊடகவியலே துடிப்பான மக்களாட்சியின் கண்காணிப்பாளர், எனவே, தேசிய பத்திரிகை நாளில், ஊடகத்தின் ஆற்றலையும் பொறுப்பையும் உணர்த்துவோம்.
அரசியல் அழுத்தங்களுக்கு சிலர் அடிபணியும் இக்காலத்தில், சாய்வற்ற நேர்மையான ஊடகவியலை முன்னெடுத்து, சுதந்திரமான ஊடகத்தின் அடிப்படை மாண்புகளை உயர்த்திப் பிடிப்போம்" எனப் பதிவிட்டுள்ளார்.
On #NationalPressDay, let's reflect on the power and responsibility of media as true journalism is the watchdog of vibrant democracy. In times where some succumb to political pressure, let us champion the spirit of unbiased reporting and uphold the core values of a free press.
— M.K.Stalin (@mkstalin) November 16, 2023