ஆதி முதல் அந்தம் வரை நீட் தேர்வில் பணம்தான் - முதல்வர் ஸ்டாலின் தாக்கு
நீட் தேர்வில் ஆதி முதல் அந்தம் வரை பணம்தான் விளையாடுவதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு
மும்பையில் நீட் தேர்வு முறைகேட்டில் இருவரை சிபிஐ கைது செய்தது குறித்த செய்தியை மேற்கோள் காட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், "தரம், தரம் என்றார்கள்! நீட் தேர்வின் ஆதி முதல் அந்தம் வரை பணம், பணம்தான் விளையாடுகிறது. அதனால்தான் நாங்கள் NEET தேர்வு Neat ஆனது அல்ல என்று சத்தமாகவும் தெளிவாகவும் சொல்கிறோம்.
ஸ்டாலின் கண்டனம்
அதற்கான எல்லா காரணங்களும் எங்களிடம் உள்ளன. நீட் எனும் தேர்வுமுறையே ஒரு moral ஊழல்! அது போதாதென்று, வினாத்தாள் தொடங்கி, தேர்வறை, முடிவுகள் வெளியீடு வரை ஒவ்வொரு நிலையிலும் நிறைந்திருப்பது குளறுபடிகளும் முறைகேடுகளும்தான்.
நீட் - முதல் கோணல் முற்றிலும் கோணல்! RSS - BJP மாநாடுகளில் showpiece-ஆக உட்கார நேரமிருக்கும் அ.தி.மு.க.வினருக்கு இவற்றை எதிர்த்து, தங்கள் எஜமானர்களிடம் பேச நேரமோ, மானமோ இல்லை!" எனத் தெரிவித்துள்ளார்.