சிறுவர்கள் விளையாடிய ஊஞ்சலை ஆட்டிவிட்டு மகிழ்ந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சமத்துவபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு திடலுக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊஞ்சலில் விளையாடிய சிறுவர்களின் ஊஞ்சலை ஆட்டிவிட்டு மகிழ்ந்தார்.
நலத்திட்ட உதவிகள்
பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காகவும்,திட்டங்களை தொடங்கி வைப்பதற்காகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள வேங்கைப்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள சமத்துவபுரத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
13 ஏக்கர் பரபரப்பளவில் ரூ.1.90 கோடி செலவில் அமைக்கப்பட்ட பெரியார் நினைவு சமத்துபுரத்தில் 100 வீடுகள்,நியாய விலைக்கடை,அங்கன்வாடி மையம்,பூங்கா உள்ளிட்ட வசதிகள் உள்ளன.
இன்று காலை இந்த சமத்துவபுரத்தை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடுகளின் சாவிகளை பயனாளர்களுக்கு வழங்கினார்.
ஊஞ்சல் ஆட்டிவிட்ட முதலமைச்சர்
பின்னர் சமத்துவபுரத்தில் உள்ள விளையாட்டு திடலுக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு சிறுமிகளுக்கு சாக்லெட் வழங்கினார்.
விளையாட்டு திடலில் சிறுவர்கள் ஊஞ்சல் ஆடிக்கொண்டிருந்தனர்.அப்போது அருகில் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊஞ்சலை ஆட்டிவிட்டு மகிழ்ந்தார்.

IQ Test: குழந்தையை கடத்த முயற்சிக்கும் நபர்.. 5 வினாடிகளில் காப்பற்றவும் - ஆபத்தில் இருப்பவர் யார்? Manithan

உச்ச கட்ட பதற்றம் : சற்று முன்னர் ஈரானின் அரசு தொலைக்காட்சி ஒளிபரப்பு தலைமையகத்தை குண்டுவீசி தகர்த்தது இஸ்ரேல் IBC Tamil
