பட்டின பிரவேசம் நடத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதி..!

M K Stalin
By Thahir May 08, 2022 06:55 AM GMT
Report

பட்டின பிரவேசம் நடத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதி அளித்துள்ளதாக தருமபுர ஆதினம் தெரிவித்துள்ளார்.

மனிதனை மனிதனே பல்லக்கில் தூக்கிச் செல்லும் பட்டினப் பிரவேச நிகழ்ச்சிக்கு தமிழக அரசு தடை விதித்திருந்தது.

இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்,

மயிலாடுதுறை தருமை ஆதீனம் தம்பிரான் சுவாமிகள், மயிலம் பொம்மபுரம் ஆதீனம் சிவஞான பாலய சுவாமி, கோவை பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் உள்ளிட்டோர் நேற்று சந்தித்து பேசினர்.

அப்போது தருமபுர ஆதீன பட்டின பிரவேச நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கஆதீனங்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், தருமபுரம் ஆதீனம் இன்று மயிலாடுதுறையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பட்டின பிரவேசம் நடத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாய்மொழியாக அனுமதி வழங்கியதாக கூறினார்.

பாரம்பரிய நடைமுறைக்கு தமிழக முதலமைச்சர் அனுமதி அளித்துள்ளார், விருப்பப்பட்டுதான் தொண்டர்கள் ஆதீனத்தை சுமக்கின்றனர் என்றும் ஆதீனம் கூறினார்.