செத்துடலாம்னு நினைக்கிறேன், முதலமைச்சரோட பேச அனுமதிக்கமாட்றாங்க : சோகத்தில் நெல்லை கண்ணன்

M K Stalin DMK
By Irumporai May 31, 2022 09:37 AM GMT
Report

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற விசிக விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற காங்கிரஸ் பிரமுகரான நெல்லை கண்ணன், முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் கண் கலங்கி பேசினார்.

தொடர்ந்து முதல்வர் மு.க. ஸ்டாலினையும் அவருடைய ஆட்சியையும் புகழ்ந்து எழுதியும் பேசியும் வருகிறார். காமராஜரோடு முதல்வர் முதல்வர் ஸ்டாலினை ஒப்பிட்டு நெல்லை கண்ணன் பேசியது பேசுபொருளானது.

செத்துடலாம்னு நினைக்கிறேன், முதலமைச்சரோட  பேச அனுமதிக்கமாட்றாங்க : சோகத்தில் நெல்லை கண்ணன் | Cm Mk Stalin Nellai Kannan Who Gives A Shock

இந்த நிலையில் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் நெல்லை கண்ணன் ஒரு நிலைத்தகவலைப் பதிவிட்டுள்ளார். அதில், “வேறு வழியில்லை எழுத வேண்டியிருக்கின்றது. மிகச் சிறப்பான முதல்வர் என உலகம் போற்றுகின்றது. அதனை யாரும் மறுக்கவும் முடியாது மறைக்கவும் முடியாது.

செத்துடலாம்னு நினைக்கிறேன், முதலமைச்சரோட  பேச அனுமதிக்கமாட்றாங்க : சோகத்தில் நெல்லை கண்ணன் | Cm Mk Stalin Nellai Kannan Who Gives A Shock

விருது வழங்கும் விழாவில் என்னை தானே பிடித்து தன் பக்கத்தில் அமரவைத்து என்னிடம் காட்டிய தாயுல்ளத்தை உயிர் உள்ளவரை மறக்க மாட்டேன் அன்று என் கரங்களைப் பற்றி தன் மடியில் வைத்துக் கொண்டு இனி நீங்கள் கண் கலங்கி நான் பார்க்கக் கூடாது என்றார் .

இனி நான் உங்களை நன்றாகப் பார்த்துக் கொள்வேனென்னை நீங்கள் எப்போதும் அழைக்கலாம் என்றார் எந்த ஒரு கடிதத்திற்கு கூட விடை இல்லை நேரில் பேச அனுமதிக்கவில்லை 79 வயதுக் கிழவன் நொந்து போயுள்ளேன் யாராவது சொல்லுங்களேன் இதனாலேயே இறந்து போகலாம் எனக்கருதுகின்றேன் மரணம் தானே உறுதி என பதிவிட்டுள்ளார்.