ரிஷப் பண்ட் உடல் நிலை எப்படி இருக்கு? நேரில் சென்ற முதலமைச்சர் - ரசிகர்கள் கவலை
ரிஷப் பண்ட் உடல்நிலை குறித்து மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தார் உத்தரகாண்ட் முதலமைச்சர்.
உயிர் தப்பிய ரிஷப் பண்ட்
இந்தியா அணியின் விக்கெட் கீப்பராக இருந்து வருபவர் ரிஷப் பண்ட். இவர் கடந்த வெள்ளிக்கிழைமை வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்டகிரிக்கெட் தொடரில் பங்கேற்றுவிற்று டெல்லியில் இருந்து உத்தரகாண்ட்ற்கு காரில் பயணம் செய்துகொண்டு இருந்தார்.
அப்போது அவர் பயணம் செய்த போது கடும் பனிமூட்டம் காணப்பட்டுள்ளது. இந்த நிலையில் கார் உத்தரகாண்ட் மாநிலம் ரூர்க்கி பகுதிக்கு வந்த போது கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவே இருந்த சென்டர் மீடியானில் மோதி தீ பிடித்தது.
இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ரிஷப் பண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பலத்த காயம் அடைந்த அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
தலை மற்றும் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் மருத்துவர்கள் அவரை 3 மாதங்கள் முதல் 6 மாதம் வரை ஓய்வில் இருக்க அறிவுறுத்தியுள்ளனர்.
முதலமைச்சர் நலம் விசாரிப்பு
ரிஷபன்ட் அனுமதிக்க பட்டுஇருக்கும் மருத்துவமனையில் அதிகமான பார்வையாளர்கள் தொடர்ந்து மருத்துவமனைக்கு வருவதால் கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்டிற்கு ஓய்வெடுக்க நேரம் கொடுக்கவில்லை என குடும்பத்தினர் கூறியுள்ளனர்.
இந்த விபத்து தொடர்பாக உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி நேரில் சென்று நலம் விசாரித்தார். ரிஷப் பண்ட் உடல் நலம் குறித்து உறவினர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் சிகிச்சைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மாநில அரசு வழங்கும் என்று உறுதி அளித்தார்.
ரசிகர்கள் பிரார்த்தனை
இந்த நிலையில் மருத்துவமனை மருத்துவர்களுடன் தினமும் பிசிசிஐ மருத்துவ குழு ரிஷப் பண்ட் உடல் நலம் பற்றி கேட்டறிந்து வருகின்றனர்.
ரிஷப் பண்ட் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று ரசிகர்கள் பிரார்த்தனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.