சட்டப்பேரவையில் இருக்கை மாற்றி அமர்ந்த முதல்வர் விஜய்
cm vijay seat changed in tn assembly: சட்டப்பேரவையில் முதல்வர் விஜய், முதல்வருக்கான இருக்கையில் அமராமல் அமைச்சர்களுக்கிடையே அமர்ந்துள்ளார்.
சட்டப்பேரவையில் இருக்கை மாற்றி அமர்ந்த முதல்வர் விஜய்
தமிழ்நாடு சட்டமன்றத்தில் வழக்கமாக முதலமைச்சர் அமர்வதற்கு தனி இருக்கை ஒதுக்கப்பட்டிருக்கும்.
அதே போல் அமைச்சர்கள் அமர்வதற்கு தனி வரிசையும், அதன் பின்னர் எம்எல்ஏக்கள் அமர்வதற்கு இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருக்கும்.

இந்நிலையில் இன்று சட்டமன்றத்தில் பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் சமூகநீதித்துறை மானிய கோரிக்கை நடைபெற்று வருகிறது.
மதியத்திற்கு மேல் சட்டமன்றத்திற்கு வந்த முதல்வர் விஜய், தனது இருக்கையில் அமராமல் அமைச்சர்கள் வரிசையில் சென்று அமர்ந்துள்ளார்.

அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா மற்றும் செங்கோட்டையனுக்கு இடையே அமர்ந்த முதல்வர் விஜய், அமைச்சர் செங்கோட்டையனுடன் தீவிரமாக உரையாடிக் கொண்டிருந்தார்.
முதல்வர் இருக்கை மாற்றி அமர்ந்தது ஏன்? என்ன உரையாடினார்கள் என சமூகவலைத்தளங்களில் பலரும் விவாதித்து வருகின்றனர்.