முதலமைச்சர் இந்துக்களின் பண்டிகைகளுக்கு வாழ்த்துக்கள் சொல்லாமல் இருப்பது ஏற்புடையதல்ல : பாஜக அண்ணாமலை
முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் : "விசேஷ நாட்களில் 'வாழ்த்து' சொல்வது என்பது தமிழர் மரபின் ஓர் அங்கம்.ஒருவொருக்கொருவர் அன்பை பரிமாறிக் கொள்ள வாழ்த்துக்கள் சொல்வது தொன்று தொட்டு கடைபிடித்து வரும் ஓர் வழக்கம்.
தமிழக முதல்வர் திரு மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு @BJP4TamilNadu சார்பாக விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்! pic.twitter.com/01P1sRxKou
— K.Annamalai (@annamalai_k) August 31, 2022
முழு மனதுடன் ஆட்சியாளர்கள் பகிரும் வாழ்த்து செய்தி அந்த மக்களின் மத நம்பிக்கைகளை நாங்கள் ஆதரிக்கிறோம் என்பதை குறிக்கிறது.
சமூக சீரழிவுக்கு வழிவகுக்கும்
இப்படிப்பட்ட வாழ்த்துக்களை கூறுவதிலும் அரசியல் உள்நோக்கத்தோடு செயல்படுவது சமூக சீரழிவுக்கு வழிவகுக்கும். அதிலும் குறிப்பிட்ட ஒரு சமூகம் கொண்டாடும் பண்டிகைக்கு மட்டுமே வாழ்த்து கூறாமல் இருப்பது ஆட்சியாளர்களுக்கு அழகல்ல.
தமிழக முதல்வர் திரு மு.க. ஸ்டாலின் அவர்கள் இந்து பண்டிகைகளுக்கு சென்ற ஆண்டும் வாழ்த்து சொல்லவில்லை, இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லுவார் என்று எதிர்பார்த்த மக்களுக்கு மிஞ்சியது ஏமாற்றமே.
தமிழக முதல்வர் திரு மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு @BJP4TamilNadu சார்பாக விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்! pic.twitter.com/01P1sRxKou
— K.Annamalai (@annamalai_k) August 31, 2022
திமுக தலைவராக நீங்கள் வாழ்த்து சொல்வதும் சொல்லாமல் இருப்பதும் கொள்கை ரீதியில் அது உங்களுடைய தனிப்பட்ட விருப்பம் ஆனால் இப்போதோ நீங்கள் அனைத்து தரப்பினராலும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மக்கள் பிரஜை.
இந்துக்கள் பண்டிகைக்கு வாழ்த்து இல்லை
கிறிஸ்துவ இஸ்லாமிய சகோதர சகோதரிகள் கொண்டாடும் பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்து சொல்லும் நீங்கள் இந்துக்களின் பண்டிகைகளின் போது வாழ்த்துக்கள் சொல்லாமல் இருப்பது ஏற்புடையதல்ல.

திமுகவில் 90 சதவீத உறுப்பினர்கள் இந்துக்களே என்று சொல்லும் நீங்கள், உங்கள் வாழ்த்துச்செய்தி அவர்களையும் சென்றடையும் என்பதற்காகவாது நீங்கள் இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்தலாமே.
தமிழகத்தில் பெருவாரியக கொண்டாடும் பண்டிகைகளுக்கு வாழ்த்து கூறாமல் இருப்பது அந்த மக்களை ஒதுக்குவது போன்ற செயலாகும் என்பதை தமிழக முதல்வர் திரு மு.க ஸ்டாலின் அவர்கள் உணர்வார் என்பதே எங்கள் நம்பிக்கை என குறிப்பிட்டுள்ளார்.
புத்தர் சிலை விவகாரம் - வாக்குறுதியை காற்றில் பறக்க விட்ட அநுர அரசு: சுமந்திரன் கடும் சீற்றம் IBC Tamil
சரிகமப : இறுதி சுற்று போட்டியாளராக தேர்வான ஷிவானியின் நெகிழ்ச்சி செயல்! குவியும் பாராட்டுக்கள் Manithan