மேகவெடிப்பு என்றால் என்ன? அது எப்படி நேர்கிறது? பார்ப்போம்

cloudburst
By Nandhini Oct 21, 2021 04:46 AM GMT
Report

பெரும்பாலும் மலைப்பாங்கான பிரதேசங்களில் ஏற்படும் இயற்கை நிகழ்வாக மேகவெடிப்பு பார்க்கப்படுகின்றன. சுமார் 20 முதல் 30 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் ஒரு மணி நேரத்தில் 10 சென்டி மீட்டருக்கு மேல் மழை பொழிவு ஏற்பட்டால் அது மேக வெடிப்பு என்று கணக்கிடப்படுகின்றது.

பருவமழைக் காலங்களில், கனமான தண்ணீர் துளிகளுடன் மேகம் தவழ்ந்து வரும்பொழுது தரையிலிருந்து மேல் எழும்பும் வெப்பமான காற்று மழைத்துளி விழுந்து விடாத வண்ணம் தடுக்குமாம்.

கிட்டத்தட்ட மேகத்தின் வெளியே வந்துவிட்ட நீரை மீண்டும் மேகத்திற்கு உள்ளேயே இந்த வெப்பக்காற்று அனுப்பி விடுமாம். இவ்வாறு கனமான தண்ணீர் துளிகளை மேகத்திற்கு அனுப்பும் வெப்பக்காற்று அழுத்தமே ஒரே நேரத்தில் மொத்தமாக மழையை கொட்டச் செய்து விடுகிறது.

இதனால் துளித் துளியாய் அல்லாமல், அருவி போல மழைநீர் கொட்டுவதால் அதன் வீரியமும், வேகமும் மிக அதிகமாக இருக்குமாம். இதனுடன் காற்றின் வேகம் போன்றவை சேரும்பொழுது அதன் வீரியம் இன்னும் மேலும் அதிகரிக்குமாம்.

இதனால்தான் மேக வெடிப்பால், திடீர் வெள்ளப்பெருக்கு கடுமையான நிலச்சரிவு மற்றும் அதிக அளவிலான இடிமின்னல் போன்றவை ஏற்பட்டு சில மணி நேரங்களில் பெரும் சேதங்களை ஏற்படுத்தி விடுகின்றன.

இந்திய வானிலையை பொருத்தவரை இத்தகைய வெடிப்புகள் பெரும்பாலும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் தான் ஏற்படுகின்றது. இத்தகைய மேக வெடிப்புகள் எப்போது எங்கு நிகழும் என்பதை துல்லியமாக கணக்கிட்டு கூற முடியாதாம். இத்தகைய மேகவெடிப்பே தற்போது உத்தரகண்ட் மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது என்று வானிலை ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். 

மேகவெடிப்பு என்றால் என்ன? அது எப்படி நேர்கிறது? பார்ப்போம் | Cloudburst