செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் எம்.எஸ். தோனி பங்கேற்க வாய்ப்பு?

MS Dhoni M K Stalin 44th Chess Olympiad
By Thahir Aug 07, 2022 05:21 AM GMT
Report

வரும் 9-ம் தேதி நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ்.தோனி பங்கேற்க உள்ளார் என்று தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது.

செஸ் ஒலிம்பியாட் போட்டி 

சென்னையில் இருக்கும் நேரு உள் விளையாட்டு மைதானத்தில் கடந்த ஜூலை 28-ல் செஸ் ஒலிம்பியாட் போட்டி துவக்க விழா கோலாகலத்துடன் துவங்கியது.

44th Chess Olympiad

இதில் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின், கவர்னர் ஆர் எம் ரவி ஆகியோர் கலந்து கொண்டனர்.

நடந்துவரும் ஒலிம்பிக் போட்டிக்காக 186 நாடுகளிலிருந்து செஸ் வீரர்கள் தமிழகத்திற்கு வருகை புரிந்துள்ளனர்.

நிறைவு விழாவில் தோனி

இந்த விழாவில் ஆயிரக்கணக்கான வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். துவக்க விழாவை போல ஒலிம்பியாட் நிறைவு நிகழ்ச்சியும் வரும் 9-ஆம் தேதி நேரு உள் விளையாட்டு மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

இந்த நிகழ்ச்சியை மிகவும் பிரம்மாண்டமாக கொண்டாட தமிழக அரசு திட்டமிட்டு இருக்கிறது. இத்தகைய நிலையில்,

MS Dhoni

வரும் 9-ம் தேதி நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ்.தோனி பங்கேற்க உள்ளார் என்று தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது.