பட வாய்ப்புகாக என்னிடம் இயக்குநர்கள் தவறாக நடந்துகொண்டார்கள் - பட்டென்று போட்டுடைத்த யாஷிகா
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமடைந்தவர் நடிகை யாஷிகா. இவர் தமிழ் சினிமாத்துறையில் துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் அறிமுகமானார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தாலும், யாஷிகாவிற்கு பெரிதளவில் பட வாய்ப்புகள் வரவில்லை. சில மாதங்களுக்கு முன்பு கார் விபத்தில் சிக்கிய நடிகை யாஷிகா, ஆபரேஷன் முடிந்து தற்போது குணமடைந்துள்ளார். மேலும், தற்போது படங்களிலும் நடிக்க துவங்கிவிட்டதாக அவரே தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை யாஷிகா பேசுகையில், தனது ஆரம்பகால சினிமா வாழ்க்கையில், வாய்ப்பு தேடும் பொழுது, பல இயக்குனர்கள் தன்னிடம் தவறான முறையில் நடந்துகொண்டார்கள். இன்னும் சில இயக்குனர்கள் தவறான காட்சிகளை நடித்து காட்டுமாறு கேட்டார்கள். நான் அதெயெல்லாம் ஒப்புக்கொள்ளாமல் அங்கிருந்து உடனடியாக கிளம்பிவிடுவேன் என்று கூறியுள்ளார்.