இன்று ஐபிஎல் திருவிழா ஆரம்பம் : சென்னை அணியில் முக்கிய வீரர்கள் மாற்றம்.. ரசிகர்கள் ஏமாற்றம்!
இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் நிலையில் சிஎஸ்கே அணியில் முக்கிய வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 14-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவிற்கு பதிலாக ஐக்கிய அமீரகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
இன்று தொடங்கும் போட்டி அக்டோபர் 15-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இப்போட்டிகள் துபாய், ஷார்ஜா, அபுதாபி ஆகிய இடங்களில் நடைபெறுகின்றன. 29 ஆட்டங்கள் முடிவில் டெல்லி 12 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் இருக்கிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூர் அணிகள் 5 வெற்றி, 2 தோல்வியுடன் தலா 10 புள்ளிகள் பெற்று முறையே 2, 3-வது இடங்களில் உள்ளது. மும்பை 8 புள்ளியுடன் 4-வது இடத்தில் இருக்கிறது.
துபாயில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 30-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் போட்டியிடுகின்றன. இன்றைய போட்டியில் ஃபாஃப் டு ப்ளெஸி, சாம் கரண் ஆகியோர் பங்கேற்க மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.