தனது அழகிய குழந்தையுடன் போட்டோ ஷூட் நடத்திய சீரியல் நடிகை ஸ்ரீதேவி அசோக்! வைரல் புகைப்படம்

cinema-viral-news
By Nandhini Sep 14, 2021 10:09 AM GMT
Report

கடந்த 2007ம் ஆண்டு சன் டிவி-ல் ஒளிபரப்பான ‘செல்லமடி நீ எனக்கு’ என்ற சீரியலில் முதன்முதலாக நடித்து சின்னத்திரையில் அறிமுகமானார் நடிகை தான் ஸ்ரீதேவி. இவர் தொடர்ந்து வாணி ராணி, தங்கம், கல்யாண பரிசு, செம்பருத்தி, ராஜா ராணி உள்ளிட்ட தொடர்களில் நடித்து பிரபலமடைந்தார்.

இதற்கிடையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புகைப்படக் கலைஞர் அசோக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது, ஸ்ரீதேவிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

இந்நிலையில், தற்போது நடிகை ஸ்ரீதேவி அவரின் கைக்குழந்தை மகளுடன் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார் ஸ்ரீதேவி. தற்போது அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.