நடிகர் விஜய்சேதுபதி மீது புதிய வழக்கு - ரசிகர்கள் அதிர்ச்சி

cinema-vijaysedhupathi-case
By Nandhini Dec 05, 2021 09:42 AM GMT
Report

நடிகர் விஜய்சேதுபதி மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

திரைத்துறையில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி மீது, சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த மகா காந்தி என்பவர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருக்கிறார்.

அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது - 

மருத்துவ பரிசோதனைக்காக மைசூர் செல்வதற்காக நவம்பர் 2ம் தேதி இரவு பெங்களூர் விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதியை எதிர்பாராத விதமாக சந்தித்தேன்.

அப்போது, திரைத்துறையில் அவரின் சாதனைகளை பாராட்டி வாழ்த்து தெரிவித்தேன்.ஆனால், தனது வாழ்த்துகளை ஏற்க மறுத்தார் விஜய் சேதுபதி. பொதுவெளியில் தன்னை இழிவுபடுத்தி பேசினார்.

தன்னையும் தனது சாதியையும் பற்றி தவறாக பேசினார். விமான நிலையத்திலிருந்து வெளியேறிய தன் மீது, அவரது மேலாளர் ஜான்சன் மூலமாக தாக்கினார். என் காதில் அறைந்தார்கள்.

இதனால், தனது செவித்திறன் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உண்மை சம்பவங்கள் இவ்வாறிருக்க, மறுநாள் ஊடகங்களில் தான் தாக்கப்பட்டதாக விஜய் சேதுபதி தரப்பில் அவதூறு பரப்பப்பட்டது.

எனவே, திரைத்துறையில் இருக்கின்ற சக நடிகரை பாராட்ட சென்ற தன்னை தாக்கி, அதை உண்மைக்கு புறம்பாக செய்தியாக்கிய நடிகர் விஜய் சேதுபதி மற்றும் அவரது மேலாளர் ஜான்சன் ஆகியோர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

சென்னை சைதாப்பேட்டை 9-வது பெருநகர உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர இருக்கிறது. 

நடிகர் விஜய்சேதுபதி மீது புதிய வழக்கு - ரசிகர்கள் அதிர்ச்சி | Cinema Vijaysedhupathi Case