வெறித்தனமான வசூல் சாதனை படைத்த ‘மாநாடு’ - சிம்புவிற்கு இனி பெஸ்ட் டைம்தான்
cinema-simbu-manatu
By Nandhini
சிம்பு நடிப்பில் வெளி வந்த படம் மாநாடு. இப்படம் கடந்த வாரம் திரைக்கு வந்தது. இப்படத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்நிலையில், மாநாடு தமிழகத்தில் ரூ.44 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாயது. அதோடு, உலகம் முழுவதும் ரூ. 60 கோடி வரை வசூல் செய்திருக்கிறது.
சிம்புவின் திரைப்பயணத்தில் தமிழகத்தில் அதிக வசூல் செய்த படமாக ‘மாநாடு’ வர இருக்கிறது. இப்படத்தினால் சிம்புவிற்கு நீண்ட வருடங்களுக்கு பிறகு ஒரு நல்ல எதிர்காலத்தை இப்படம் கொடுத்துள்ளது. அந்த அளவிற்கு அவருடையை ரசிகர்களுக்கும் இப்படம் மிகுந்த உற்சாகத்தை கொடுத்திருக்கிறது.