ஆர்யன் கானை விடுவிக்க ரூ.25 கோடி பேரம் - வான்கடே மீது புகார் : வாக்குமூலத்தை பதிவு செய்த அதிகாரிகள்

cinema-sharukkan-son-drug-police-investigation
By Nandhini Oct 28, 2021 03:54 AM GMT
Report

பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் மகன் போதைப் பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் விசாரணை அதிகாரி சமீர் வான்கடே ரூ.25 கோடி பேரம் பேசியதாகக் கூறப்பட்ட விவகாரத்தில் அதிகாரிகள் வாக்குமூலத்தை பதிவு செய்தார்கள்.

போதை விருந்தில் பங்கேற்றதாக புகார் எழுந்ததையடுத்து, பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உட்பட 20 பேரை போதைப் பொருள் தடுப்பு பிரிவின் மும்பை மண்டல இயக்குனர் சமீர் வான்கடே தலைமையிலான அதிகாரிகள் சமீபத்தில் கைது செய்தார்கள்.

இந்த வழக்கில், தனியார் துப்பறியும் நிபுணரான கே.பி.கோசாவி, அவரது கார் டிரைவரும், மெய்க்காப்பாளருமான பிரபாகர் செய்ல் உட்பட 8 பேர் முக்கிய சாட்சிகளாக சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.

முதன்மை சாட்சியான பிரபாகர் செய்ல், போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறுகையில், ஆர்யன் கான் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்ட பின் 10 வெற்று காகிதங்களில் போலீஸ் அதிகாரி சமீர் வான்கடே என்னிடம் கையெழுத்து வாங்கினார். ஷாருக்கின் மேலாளரை கோசாவி உட்பட 2 பேரைச் சந்தித்து பேசி வழக்கிலிருந்து ஆர்யன் கானை விடுவிக்க 25 கோடி ரூபாய் பேரம் பேசினார்கள்.

இதில் 8 கோடி ரூபாயை வான்கடேவிடம் தர வேண்டும் என ஷாருக் மேலாளரிடம் கோசாவி தெரிவித்தார். இதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன என்று அந்த மனுவில் கூறியிருந்தார்.

இந்த புகார் குறித்து விசாரிக்க டெல்லியைச் சேர்ந்த போதைப் பொருள் தடுப்பு பிரிவின் துணை இயக்குனர் ஜெனரலும், லஞ்ச ஒழிப்புத் துறை தலைமை அதிகாரியுமான கியானேஸ்வர் சிங் தலைமையில் 5 அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். அதிகாரிகள் 6 பேரும் மும்பைக்கு நேற்று காலை வந்தார்கள்.

தெற்கு மும்பையில் உள்ள போதைப் பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்துக்கு சென்று, சில முக்கிய ஆவணங்களை கைப்பற்றினார்கள். பின்னர், கியானேஸ்வர் சிங் கூறுகையில், ஆர்யன் வழக்கில் சாட்சி கூறிய குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணையை துவக்கி இருக்கிறோம். இந்த புகார் தொடர்பாக வான்கடேவின் வாக்குமூலத்தையும் பதிவு செய்திருக்கிறோம். மற்ற சாட்சிகளின் வாக்குமூலத்தையும் பதிவு செய்வோம் என்றார். 

ஆர்யன் கானை விடுவிக்க ரூ.25 கோடி பேரம் - வான்கடே மீது புகார் : வாக்குமூலத்தை பதிவு செய்த அதிகாரிகள் | Cinema Sharukkan Son Drug Police Investigation