‘மனவேதனையின் உச்சத்தில் இருக்கும் போது தயவு செய்து இதை பண்ணாதீங்க..’ – செல்வராகவன் டுவிட்

Twitter Selvaragavan
By Nandhini Dec 03, 2021 07:17 AM GMT
Report

மனவேதனையின் உச்சத்தில் இருக்கும் போது தயவு செய்து எந்த முடிவும் எடுக்காதீர்கள் என்று இயக்குனர் செல்வராகவன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

பாலியல் தொந்தரவு, தேர்வில் தோல்வி, மன உளைச்சல் போன்ற காரணங்களால், இன்று பலரும் தங்களது உயிரை மாய்த்து கொண்டு வருகிறார்கள்.

அந்த வகையில், நேற்று முன்னாள் நம்சுகாட்டுப்பாடு வாரிய தலைவர் வெங்கடாசலம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில், இது குறித்து பிரபல இயக்குனர் செல்வராகவன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், ‘தயவு செய்து மனவேதனையின் உச்சத்தில் இருக்கும் போது எந்த முடிவும் எடுக்காதீர்கள். இரண்டு நாட்கள் கழித்து யோசிப்போம் என்று விட்டு விட்டு நன்கு உணவருந்தி ஓய்வெடுங்கள். இரண்டு நாட்களுக்கு பிறகு ஒன்று பிரச்சனையே இருக்காது இல்லை நீங்கள் முடிவெடுக்கும் மனநிலையில் இருப்பீர்கள்.’ என்று பதிவிட்டுள்ளார்.

‘மனவேதனையின் உச்சத்தில் இருக்கும் போது தயவு செய்து இதை பண்ணாதீங்க..’ – செல்வராகவன் டுவிட் | Cinema Selvaragavan Twitter