சமந்தாவை விவாகரத்து செய்ய இதுதான் காரணமா? குத்தி காட்டி பேசிய நாகசைதன்யா - வைரலாகும் வீடியோ
நடிகரும், பிரபல நடிகை சமந்தாவின் முன்னாள் கணவருமான நாக சைதன்யா சமீபத்திய பேட்டி ஒன்று சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், தன்னுடைய மனைவி சமந்தாவை குத்தி காட்டி பேசுவது போல், மறைமுகமாக தங்களின் விவாகரத்து குறித்த காரணத்தை வெளிப்படுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக இருப்பவர் நாக சைதன்யா. இவரும், நடிகை சமந்தாவும், கடந்த அக்டோபர் மாதம் 2ம் தேதி இருவரும் ஒருமனதாக பிரிந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சமந்தா - நாக சைதன்யா பிரிவு குறித்து பல வதந்திகள் வெளி வந்துக் கொண்டிருக்கின்றன.
இது குறித்து சமந்தா தன்னுடைய அறிக்கை மூலம் பதில் அளித்தது மட்டும் இன்றி, தன்னை பற்றி அவதூறு பரப்பியவர்கள் மீது வழக்கு தொடர்ந்ததும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இதுநாள் வரை மவுனமாக இருந்த நாக சைதன்யாவின் வீடியோ ஒன்று தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், அவர் தனது கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார். “நான் எல்லா வகையான பாத்திரங்களையும் தேர்வு செய்யும் போது அது ஒரு போதும், எனது குடும்பத்தையும், எங்கள் கௌரவத்தையும் பாதிக்கக் கூடாது என்பதில் கவனமாக இருப்பேன். எனது குடும்ப உறுப்பினர்களை சங்கடப்படுத்தும் வேடங்களில் நடிக்க மாட்டேன்’ என்று பேசியுள்ளார்.
இவர் பேசியதை வைத்து பார்க்கும்போது, சமந்தா திருமணத்திற்கு பிறகு... தொடர்ந்து சர்ச்சையான வேடங்களை தேர்வு செய்து நடித்தது தான் விவாகரத்துக்கு காரணமா? என ரசிகர்கள் பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
இப்பேட்டியின் மூலம் மறைமுகமாக சமந்தாவை சைதன்யா சாடி இருப்பதாக கூறப்படுகிறது.
திருமண முறிவுக்கு பின்னர், சமந்தா ‘புஷ்பா’ படத்தில் இடம்பெறும் ஐட்டம் பாடலான 'ஓ சொல்றியா மாமா' வேற லெவலுக்கு ஹிட்டாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.