ஹோட்டல் இருந்த பொருட்களை காணவில்லை - மீரா மிதுன் உள்ளிட்ட 6 பேர் மீது புகார்
மீரா மிதுனுடன் வந்த 6 உதவியாளர்களையும் காணவில்லை என்றும், அவர்கள் தங்கியிருந்த ஹோட்டல் அறையிலிருந்த பொருட்களை எடுத்துச் சென்று விட்டதாகவும் தற்போது புகார் எழுந்துள்ளது.
நடிகை மீரா மிதுன், மாடலிங் மற்றும் அழகுப் போட்டிகளில் பங்கேற்றது மட்டுமின்றி தமிழ் சினிமாவில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார்.
ரியாலிட்டி ஷோ-வான 'ஜோடி நம்பர் ஒன்', சீசன் 8-ல் கலந்துக்கொண்டார். பிறகு, 'பிக் பாஸ் சீசன் 3' ல் கலந்துக் கொண்டார். 'பிக் பாஸ் 3' நிகழ்ச்சிக்குப் பிறகு மீரா பல சர்ச்சைகளில் சிக்கினார்.
அதில் சூர்யா, ஜோதிகா, விஜய் மற்றும் கமல்ஹாசன் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் மீது சமூக வலைதளங்களில் வார்த்தை தாக்குதல் நடத்தினார்.
இது பெரும் சர்ச்சையாக வெடித்தது. இதைத்தொடர்ந்து பட்டியல் பிரிவு மக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதால் மீரா மிதுன் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், மீரா சிறையிலிருந்து வெளிவந்த நடிகை மீரா மிதுன் பிறகு 'பேய காணோம்' என்ற புதிய திரைப்படத்தில் நடித்து வந்தார். இப்படத்தில், அவர் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கொடைக்கானலில் நடந்து கொண்டிருந்தது. ஆனால், மீரா திடீரென தலைமறைவாகிவிட்டதாக படத்தின் இயக்குநர் செல்வ அன்பரசன் குற்றம் சாட்டி இருக்கிறார். மீரா மிதுனுடன் வந்த 6 உதவியாளர்களையும் காணவில்லை என்றும், அவர்கள் தங்கியிருந்த ஹோட்டல் அறையில் இருந்த பொருட்களை எடுத்துச் சென்று விட்டதாகவும் புகார் கொடுத்தள்ளார்.
இன்னும் 2 நாட்களே வேலை பாக்கி உள்ள நிலையில், மீரா தயாரிப்பாளருக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி விட்டார் என்றும், அவர் மீது திரையுலகின் அனைத்து அமைப்புகளிலும் புகார் அளிக்கப் போவதாகவும் அன்பரசன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.